ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அதிரடியாக உயரும் சம்பளம்?

அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து இன்னொரு இனிப்பான செய்தி வந்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2022, 9:41 am
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு பெரிய பரிசை வழங்கப் போகிறது. ஒரே நேரத்தில் 4 அலவன்ஸ்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும்.
Samayam Tamil DA hike


சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் 34 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப் படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸும் அதிகரிக்கவிருக்கிறது. இத்துடன் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் கிராச்சுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

3% அதிகரிக்கலாம்!

மத்திய அரசு ஊழியர்களின் PF மற்றும் பணிக்கொடை (கிராச்சுட்டி) கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு 3 சதவீதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த ஒரு பாலிசி போதும்.. உங்க குழந்தையின் எதிர்காலம் வேற லெவல்!
சில நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 28) மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது. அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள் 2022 ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஊழியர்களின் கணக்கில் பணம் வந்து சேரும். அரசின் இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்