ஆப்நகரம்

தொடர்ந்து உயரும் பால் விலை.. பொதுமக்கள் கண்ணீர்!

அமுல், மதர் டெய்ரி நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது மற்றொரு நிறுவனமும் பால் விலையை உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 19 Aug 2022, 4:30 pm
பஞ்சாப் மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. Milkfed Verka என்ற பிராண்டு பெயரில்தான் இந்நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) முதல் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் பால் விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil milk price


பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காய்கறி விலை, சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை என எங்கு பார்த்தாலும் விலையேற்றம் இருக்கும் சூழலில் பால் விலை உயர்ந்து கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. பால் விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் பால் விவசாயிகளுக்கு இது நன்மையை ஏற்படுத்தும். அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இனி பால் வாங்குறது கஷ்டம்.. அதிரடியாக உயர்ந்த விலை!
சில நாட்களுக்கு முன்னர்தான் அமுல் நிறுவனமும் மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலையை உயர்த்தின. ஆகஸ்ட் 17 முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் உயர்த்தின. கடந்த ஆறு மாதங்களில் பால் வரை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்