ஆப்நகரம்

போராடியதோ தமிழகம், பெப்சி ஆலையை மூடப்பட்டதோ கேரளாவில்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வலியுறுத்தபட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்ற கருத்து மேலோங்கியதை அடுத்து, தமிழகத்தில் பெப்சி, கோக் விற்க்க போவதில்லை என வணீக சங்கம் அறிவித்தது.

TNN 10 Mar 2017, 1:05 pm
சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வலியுறுத்தபட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்ற கருத்து மேலோங்கியதை அடுத்து, தமிழகத்தில் பெப்சி, கோக் விற்க்க போவதில்லை என வணீக சங்கம் அறிவித்தது.
Samayam Tamil after being boycotted in tamil nadu pepsi stops production in kerala due to lack of water
போராடியதோ தமிழகம், பெப்சி ஆலையை மூடப்பட்டதோ கேரளாவில்!


பெப்சி, கோக் தடை இல்லை:
இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் பெப்சி, கோக் குளிர்பானங்களின் விற்பனை சரிந்தது. இந்நிலையில், தாமிரபரணியில் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்தது. தடையை நீக்க கோரி பெப்சி நிறுவன இந்திரா நூயி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடையில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.



பெப்சி நிறுவனம் மூடல்:
இந்நிலையில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெப்சி நிறுவனம் தண்ணீர் பற்றாக்குறை என கூறி தன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.



பாலக்காட்டில் உள்ள பெப்சி நிறுவனத்தின் மூலம் தினமும் 1,50,000 லட்சம் முதல் 6,00,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி குளிர்பானம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை என கூறி பெப்சி உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

பொதுமக்கள் புகார்:
பாலக்காடில் உள்ள பெப்சி நிறுவனத்தால், அதை சுற்றியுள்ள 20 கிமீ தூரத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி கவுன்சிலர் பெப்சி ஆலையை மூட வலியுறுத்தினார்.




ஏற்கனவே கேரளா அரசு சார்பாக ஜனவரி 30ம் தேதி பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுக்க மார்ச் மாதம் வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் ஆலையை பார்வையிட்ட பின் மூடப்பட்டுள்ளது.

கோக்கிற்கு ஆப்பு:
கடந்த 2004ம் ஆண்டு பாலக்காட்டில் செயல்பட்டு வந்த கோககோலா நிறுவனம் மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மூடப்பட்டது.



தமிழர்களுக்கு மட்டும் ஏமாற்றம்:
கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குளிர்பான நிறுவனங்கள் மூட அரசு உத்தரவிட்டதை தொடந்து அங்கு பெப்சி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



ஆனால் நெல்லையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடையில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்