ஆப்நகரம்

அகவிலைப்படி மீண்டும் உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!

ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2022, 1:58 am
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. புதிய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
Samayam Tamil da hike


ராஜஸ்தானின் மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். 2022 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அட்டகாச அறிவிப்பு.. சம்பள உயர்வு வந்தாச்சு!
2021ஆம் ஆண்டிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அப்போதும் 3 சதவீத உயர்வு இருந்தது. இந்த முறையும் 3 சதவீத உயர்வை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வுக்கு மத்திய அமைச்சரவை நேற்றைய முன்தினம் ஒப்புதல் வழங்கியது.

தற்போது புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்