ஆப்நகரம்

150 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல வங்கி.. தொடர் நஷ்டத்தின் எதிரொலி!!

உலகின் பிரபல வங்கியான Softbank 50 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்ததை அடுத்து அதன் 30% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 1:19 pm
ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சாப்ட்பேங்க், அதன் விஷன் ஃபண்ட் யூனிட் மற்றும் சாப்ட்பேங்க் குரூப் இன்டர்நேஷனல் ஆகியவற்றில் உள்ள சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கூறியுள்ளது.
Samayam Tamil soft bank layoff


இந்த விஷயம் குறித்து நன்கு அறிந்த ஒரு நபர் சொன்ன தகவலின்படி விஷன் ஃபண்ட் மற்றும் சாஃப்ட் பேங்க் குரூப் இன்டர்நேஷனல் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட முக்கிய செலவு மையங்களில் ஏற்பட்டுள்ள இழப்பைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1b7v9gg&height=360&width=640

SoftBank CEO Masayoshi Son தனது சில தொழில்நுட்ப சவால்களில் பெரும் இழப்பை எதிர்கொண்டார். முன்னதாக, ஆகஸ்டில், SoftBank, ஜூன் மாதம் வரை விஷன் ஃபண்ட் யூனிட் 50 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. மேலும் அரசியல் காரணங்கள் மற்றும் தொடர் வங்கி வட்டி உயர்வாலும் தொடர் சரிவில் இருந்த வங்கி அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

விஷன் ஃபண்ட் முதலீட்டுச் செயல்பாட்டைத் தீவிரமாகக் குறைத்துள்ளதால், சாப்ட்பேங்கின் இரண்டாவது விஷன் ஃபண்ட் அதன் தற்போதைய போர்ட்ஃபோலியோவை முதன்மையாக நிர்வகிக்கும் என்று மசயோஷி சன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்