ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அது கிடைக்குமா? நீண்ட நாள் காத்திருப்பு!

8ஆவது ஊதியக் குழு விரைவில் அமல்படுத்தப்பட்டவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்துக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 20 May 2023, 4:09 pm
நீங்களோ அல்லது உங்களது உறவினரோ மத்திய அரசு ஊழியராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தால் விரைவில் அது உங்களுக்கு கிடைக்கவுள்ளது. இதன் மூலம், ஓய்வூதியதாரர்களும் அதிக பலன்களைப் பெறுவார்கள். 8ஆவது ஊதியக் குழு (8ஆவது சம்பள கமிஷன்) தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ஆவது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமல்படுத்தவிருக்கிறது.
Samayam Tamil 8th pay update


இக்குழுவை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வரும் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என சில செய்திகள் வந்துள்ளன. இதனுடன், ஃபிட்மென்ட் காரணி தவிர வேறு சில வழிகளில் சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்த பிறகு ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் பெரிய மாற்றத்தை நீங்கள் காணலாம்.

7ஆவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருந்தது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்து, அடிப்படை சம்பளம் ரூ. 18,000 ஆக இருந்தது. தற்போது 8ஆவது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தினால், இம்முறை ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்போது ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயர்த்தப்படும். இந்த உயர்வுக்குப் பிறகு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக அதிகரிக்கும்.

8ஆவது ஊதியக் குழுவை அரசு எப்போது அமல்படுத்தும்?

தற்போது 8ஆவது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. உறுதிபடுத்தப்படாத தகவல்களே கசிந்துகொண்டிருக்கின்றன. எனினும் 2024ஆம் ஆண்டுக்குள் 8ஆவது ஊதியக் குழுவை உருவாக்கி 2026ஆம் ஆண்டுக்குள் அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் இந்த புதிய ஊதியக் குழு 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கணித்துள்ளனர். மறுபுறம், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு 8ஆவது ஊதியக் குழுவின் வடிவத்தில் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதிய சம்பள கமிஷன் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டுமுதல் முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

2014ஆம் ஆண்டின் பிப்ரவரி 24ஆம் தேதியன்று 7ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுக்கள் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்தன. அதை ஏற்றுக் கொண்டு சம்பளம்மும் உயர்த்தப்பட்டது. அதேபோல, இந்த முறையில் அதிகளவு சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்