ஆப்நகரம்

வேளாண் ஏற்றுமதி: கொரோனா காலத்திலும் சாதனை!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 23.24 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2020, 8:10 pm
இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறித்த விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 25,552.7 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு ரூ.20,734.8 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டில் ஏற்றுமதி மதிப்பில் 23.24 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் சர்வதேச அளவில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருந்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil agri export


வேளாண் துறையில் இந்தியா இறக்குமதியை அதிகமாகச் சார்ந்திருக்காமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்றுமதியில் நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை. சர்வதேச அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆனால் ஏற்றுமதியில் இந்தியா 34 ஆவது இடத்தை மட்டுமே பெற்றுள்ளது.

ஈஎம்ஐ கட்ட இன்னும் ஆறு மாதம் அவகாசம்?

அதேபோல, காய்கறி உற்பத்தியில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா, ஏற்றுமதியில் 14ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் ஏற்றுமதியில் 23ஆவது இடத்தையே பெற்றுள்ளது. எனவே அதிக உற்பத்தி இருந்தாலும் ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக முழுமையான செயல் திட்டம் ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த அணுகுமுறை இறக்குமதியை மாற்றியமைக்கும் கவனம் கொண்ட செயல் திட்டமாகவும் மதிப்பு கூட்டுவதை வலியுறுத்துவதாகவும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்