ஆப்நகரம்

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை!

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 43.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 8:04 pm
இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறித்த விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மொத்தம் ரூ.53,626.6 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் ஏற்றுமதி மதிப்பை விட இப்போது 43.4 சதவீதம் கூடுதலான மதிப்பில் ஏற்றுமதி நடந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் ஏற்றுமதி மதிப்பு ரூ.37,397.3 கோடியாக மட்டுமே இருந்தது.
Samayam Tamil agri exports


இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஏற்றுமதியில், வேர்க்கடலை 35 சதவீதமும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை 104 சதவீதமும், கோதுமை 206 சதவீதமும், பாஸ்மதி அரிசி 13 சதவீதமும், பாஸ்மதி அல்லாத அரிசி 105 சதவீதமும் கூடுதலான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

செத்தாலும் ஆதார் வேணும்... இறப்புச் சான்றிதழுக்கு ஆதார் கட்டாயம்!

செப்டம்பர் மாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், ஏற்றுமதி மதிப்பு 2019 செப்டம்பரில் ரூ.5,114 கோடியிலிருந்து 2020 செப்டம்பரில் ரூ.9,296 கோடியாக உயர்ந்துள்ளது. இது 81.7 சதவீத வளர்ச்சியாகும். இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக 2018 வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் பணப்பயிர்களுக்கான ஏற்றுமதியில் அதிக முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் 8 ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகள் இருந்தும் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்