மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் ஏர் இந்தியா. நீண்ட காலமாகக் கடுமையான நிதி நெருக்கடியாலும் வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது. ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமையும் இருக்கிறது. எனவே ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து அதன் கடனை அடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சூடுபிடித்தது ஏர் இந்தியா விற்பனை!
முதல் விற்பனை முயற்சியில் ஏர் இந்தியாவை வாங்க எவரும் முன்வராததால் சில சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா தனியார் வசம் செல்லவிருக்கும் நிலையில், அதன் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடனை அடைக்க கடன் வாங்கும் ஏர் இந்தியா!
ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், மற்ற சலுகைகள் குறித்த தெளிவான விளக்கம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் தங்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். மும்பையில் நவம்பர் 6ஆம் தேதி ஏர் இந்தியா ஊழியர்கள் பிரதிநிதிக் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை வாங்க யாராவது இருக்கீங்களா?
ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஆதரவு தரும்படி, மத்திய வர்த்தக அமைப்புகளுக்கும், சர்வதேச போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும், அதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளைக் கையிலெடுப்போம் எனவும் ஏர் இந்தியா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேணும்னா பேரை மாத்திக்கோங்க... விமானத்தை விற்கப் புதுத் திட்டம்!
ஏர் இந்தியாவில் 20,000 பேருக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முதல் விற்பனை முயற்சியில் ஏர் இந்தியாவை வாங்க எவரும் முன்வராததால் சில சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா தனியார் வசம் செல்லவிருக்கும் நிலையில், அதன் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடனை அடைக்க கடன் வாங்கும் ஏர் இந்தியா!
ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், மற்ற சலுகைகள் குறித்த தெளிவான விளக்கம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் தங்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். மும்பையில் நவம்பர் 6ஆம் தேதி ஏர் இந்தியா ஊழியர்கள் பிரதிநிதிக் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை வாங்க யாராவது இருக்கீங்களா?
ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஆதரவு தரும்படி, மத்திய வர்த்தக அமைப்புகளுக்கும், சர்வதேச போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும், அதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளைக் கையிலெடுப்போம் எனவும் ஏர் இந்தியா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேணும்னா பேரை மாத்திக்கோங்க... விமானத்தை விற்கப் புதுத் திட்டம்!
ஏர் இந்தியாவில் 20,000 பேருக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.