ஆப்நகரம்

உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு: ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அரசு உத்தரவாதம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கினாலும் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வருடத்துக்கான பணிக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Nov 2019, 12:13 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் ஏர் இந்தியா. நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்துவரும் ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் ஏர் இந்தியா, தனது செயல்பாட்டுக்குத் தேவையான நிதி இல்லாமல் சொத்து விற்பனை, பங்கு விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
Samayam Tamil உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு_ ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அரசு உத்தரவாதம்


ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்பனை செய்து அதைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள் மும்முரமாக உள்ள நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் அதன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் உள்ளிட்ட சில சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விற்பனைக்கான பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றுவந்தாலும், மறுபுறம் ஏர் இந்தியாவின் ஊழியர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


Gold Rate: தங்கம் விலை குறைஞ்சிருக்கு... ஆனா எவ்வளவு தெரியுமா?

2018 மார்ச் மாத நிலவரப்படி, ஏர் இந்தியாவில் மொத்தம் 11,827 பேர் வேலைபார்க்கின்றனர். இதில் 37 சதவீத நிரந்தர ஊழியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வுபெறும் நிலையில் இருக்கின்றனர். ஏர் இந்தியா அரசிடமிருந்து கைமாறிவிட்டால் ஊழியர்களின் வேலைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்னும் நிலையில், ஏர் இந்தியா விற்பனைக்கு ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


மாற்றுப் பாதையில் செல்லுங்கள்: கார் நிறுவனங்களிடம் அரசு கோரிக்கை!

இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்களின் பணிக்கு அடுத்த ஒரு வருடத்துக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிப்பீடுகளின்படி, ஏர் இந்தியாவின் மொத்த வருவாயில் 11.4 சதவீதம் அளவு அல்லது ரூ.3,005 கோடி தொகையானது ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே ஏர் இந்தியாவின் செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்த அளவோ அல்லது முழுமையாகவோ குறைக்கப்பட வாய்ப்புள்ளது.


பெண்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்கு தெரியுமா?

இதுபோன்ற சூழலில்தான் ஊழியர்களின் பணிப் பாதுகாப்புக்காக மத்திய அரசு இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. தனியார் மயமாக்கலுக்குப் பின்னர் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு என்ன தேவையோ (பணி) அதை செய்துகொடுக்க அரசு தயாராக இருப்பதாக மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருந்தார்.

அதேபோல, சம்பளம் கொடுக்காததால் விமான ஓட்டிகள் சிலர் வேலையை விட்டு நின்றதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்