AI Express Record: உட்கார ஒரு சீட்டு கூட மிச்சமில்லை; புதிய சாதனை படைத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
இந்தியாவிற்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், முதல் முறையாக முழுவதுமாக இருக்கைகள் நிரம்பி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
Samayam Tamil 3 Jun 2019, 1:30 pm
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், நாட்டின் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கி வருகிறது.
இதன் ஒரு அங்கமாக கொச்சியை சேர்ந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ் ஆன, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளங்குகிறது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிறுவனம் 25 போயிங் 737 விமானங்களை தன் வசம் வைத்துள்ளது. இதன்மூலம் 13 சர்வதேச மற்றும் 20 உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் பயணிகளின் வசதிக்காக விமானத்தின் உட்புறம், இருக்கைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் சார்ஜிங் செய்யும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 31ஆம் தேதி அன்று, இந்தியாவிற்கு வந்து சேர்ந்த அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களிலும் ஒரு இருக்கை கூட மிச்சமில்லை.
அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, பயணிகள் வருகையால் நிரம்பி காணப்பட்டன. இது அந்த நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வு ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களில் நடந்துள்ளது.
உலகில் உள்ள எந்தவொரு விமான நிறுவனத்திற்கும், அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதனை ஏர் இந்தியா சாதித்துக் காட்டியுள்ளது.
பயணிகள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இத்தகைய ஒத்துழைப்பை பயணிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக கொச்சியை சேர்ந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ் ஆன, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளங்குகிறது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிறுவனம் 25 போயிங் 737 விமானங்களை தன் வசம் வைத்துள்ளது. இதன்மூலம் 13 சர்வதேச மற்றும் 20 உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் பயணிகளின் வசதிக்காக விமானத்தின் உட்புறம், இருக்கைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் சார்ஜிங் செய்யும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 31ஆம் தேதி அன்று, இந்தியாவிற்கு வந்து சேர்ந்த அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களிலும் ஒரு இருக்கை கூட மிச்சமில்லை.
அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, பயணிகள் வருகையால் நிரம்பி காணப்பட்டன. இது அந்த நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வு ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களில் நடந்துள்ளது.
உலகில் உள்ள எந்தவொரு விமான நிறுவனத்திற்கும், அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதனை ஏர் இந்தியா சாதித்துக் காட்டியுள்ளது.
பயணிகள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இத்தகைய ஒத்துழைப்பை பயணிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.