ஆப்நகரம்

விமானம் புறப்படுற கடைசி 3 மணி நேரத்தில் புக் பண்ணா, இதோ அட்டகாசமான ஏர் இந்தியா தள்ளுபடி!

கடைசி நிமிட தள்ளுபடி என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

TIMESOFINDIA.COM 10 May 2019, 4:56 pm
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், கடைசி 3 மணி நேரத்தில் புக் செய்யும் டிக்கெட்களுக்கு அதிக தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Samayam Tamil Air India


இது அவசரமாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பயணிகளுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏர் இந்தியா, உள்நாட்டு விமானச் சேவையில் கடைசி 3 மணி நேரத்தில் பயணிகள் டிக்கெட் புக் செய்தால் பெரும் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கடைசி நிமிட புக்கிங்கில் உண்மையான விலையை விட 40% அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடைசி நிமிட பயண முடிவு என்பது மிகவும் அவசரமான, அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும்.

அவர்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தால், மிகுந்த பாதிப்பாக இருக்கும். இந்த முடிவு ஏர் இந்திய தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா புக்கிங் கவுண்டர்கள், ஏர் இந்தியா மொபைல் ஆப், ஏர் இந்தியா இணையதளம், டிராவல் ஏஜெண்ட்கள் மூலம் பெறலாம். இது ஒரு அரிதான முடிவு என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்