ஆப்நகரம்

ஏர் இந்தியா: ஒரு வழியா சம்பளம் கிடைச்சிருச்சு... பைலெட்கள் பெருமூச்சு!

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான ஓட்டிகளுக்கான நவம்பர் மாத சம்பளத்தை தற்போது வழங்கியுள்ளது.

Samayam Tamil 28 Dec 2019, 4:50 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. எனவே ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பனை செய்து கடனை அடைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இருக்கிறது. ஏர் இந்தியா விற்பனைக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவை விற்பனை செய்வது அரசுக்கு சரியான முடிவாக இருந்தாலும் அதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
Samayam Tamil ஏர் இந்தியா_ ஒரு வழியா சம்பளம் கிடைச்சிருச்சு பைலெட்கள் பெருமூச்சு


ஏர் இந்தியா ஊழியர்களுக்கான சம்பளமும் கடந்த சில மாதங்களாகவே இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதன் முதல் வாரத்திலேயே சம்பளத்துடன் பறப்பதற்கான சலுகைத் தொகையை விமான ஓட்டிகளுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த மாதத்தில் அதை ஏர் இந்தியா கொடுக்காமல் தாமதித்து வந்தது. இந்நிலையில் சுமார் 1,600 விமான ஓட்டிகளுக்கும் சலுகைத் தொகையை டிசம்பர் 27ஆம் தேதி ஏர் இந்தியா வழங்கியுள்ளது. இந்த சலுகைத் தொகை மொத்த சம்பளத்தில் 50 முதல் 80 சதவீதம் வரையில் இருப்பதால் அது தாமதிக்கப்படும்போது பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

வாங்குறாங்க.. ஆனா திருப்பி கொடுக்க மாட்றாங்க: கதறும் வங்கிகள்!

ஏர் இந்தியா தொடர்ந்து இயங்குவதற்கு அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதி கோரப்பட்டது. ஆனால் ரூ.500 கோடியை மட்டுமே சென்ற வாரத்தில் அரசு வழங்கியது. 2011-12ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் அரசு தரப்பிலிருந்து ஏர் இந்தியாவுக்கு ரூ.30,520.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடி குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே ஊழியர்களுக்கான சம்பளத்தை ஏர் இந்தியா சரியான சமயத்தில் வழங்குவதில்லை என்று ஊழியர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

ஏடிஎம்: இனி நைட்ல பயமில்லாம பணம் எடுக்கலாம்!

2018-19ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் இழப்பு ரூ.8,556.35 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்காவிட்டால் அதை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்