ஆப்நகரம்

ஏர் இந்தியா விற்பனை எப்போது? இன்று போய் நாளை வா...

ஏர் இந்தியா விமானத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 5:49 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் திணறும் ஏர் இந்தியா, சம்பளக் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதுவும் கொரோனா வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.
Samayam Tamil air india


2017ஆம் ஆண்டிலேயே ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. ஆனால் பிரச்சினைக்குரிய இந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை. பின்னர் சில சலுகைகளை அறிவித்து விற்பனைப் பணியை மீண்டும் தொடங்கியது மத்திய அரசு. ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளை விற்பனை செய்வதாகவும், ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அதன் பிராண்டு பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

அக்கவுண்ட்ல பணம் இல்லாமலேயே ரூ.3 லட்சம் வரை எடுக்கலாம்!!
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்டதால் ஏர் இந்தியா விற்பனை முடங்கியது. எப்போது ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான ஏலப் பணி தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குரூப் உள்ளிட்ட பெரிய பெரிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்