டெல்லி: ஏர் இந்தியாவின் பங்குகளை நான்காக பிரித்து விற்கப்போவதாக மத்திய இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார்.
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51% பங்குகளை விற்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்தது
விற்பதற்கு முன் பணியாளர்களைக் குறைக்கும் முகமாக ஓய்வுக்குப் பின்னும் பணியாற்றி வந்த, தொழில்நுட்ப பிரிவில் இல்லாத, 400 ஒப்பந்த தொழிலாளர்கள் ஜனவரி 5ஆம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா இந்தியாவை விற்பது குறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா, “ரூ.52,000 கோடிக்கும் அதிமான கடன் சுமை உள்ளதால், ஏர் இந்தியாவில் அரசின் பங்குகள் விற்கப்பட உள்ளன. நான்கு நிறுவனங்களாக பிரித்து ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்யப்பட்டுவிடும்.” என்று கூறியுள்ளார்.
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், இந்நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51% பங்குகளை விற்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்தது
விற்பதற்கு முன் பணியாளர்களைக் குறைக்கும் முகமாக ஓய்வுக்குப் பின்னும் பணியாற்றி வந்த, தொழில்நுட்ப பிரிவில் இல்லாத, 400 ஒப்பந்த தொழிலாளர்கள் ஜனவரி 5ஆம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா இந்தியாவை விற்பது குறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா, “ரூ.52,000 கோடிக்கும் அதிமான கடன் சுமை உள்ளதால், ஏர் இந்தியாவில் அரசின் பங்குகள் விற்கப்பட உள்ளன. நான்கு நிறுவனங்களாக பிரித்து ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்யப்பட்டுவிடும்.” என்று கூறியுள்ளார்.