ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தத் தவறிவிட்டதால் 6 நகரங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாக்கியைச் செலுத்தாத காரணத்தால் கொச்சி, விசாகப்பட்டினம், மொகாலி, ராஞ்சி, புனே மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சி
"அரசிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த ஆண்டில் எங்களுடைய செயல்பாடு நல்லபடியாகவே உள்ளது. லாபம் ஈட்டும் நிலையை நோக்கி ஆரோக்கியமான முறையில் இயங்கி வருகிறோம். சட்டச் சிக்கல்களுக்கு இடையிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்." என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகபட்சம் 90 நாட்கள் வரை பாக்கி வைத்திருப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் பாக்கி 200 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் உள்ளது. 60 கோடி ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள். அது கடலில் ஒரு துளி நீர் போலத்தான்” என்று தெரிவித்தார்.
ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்
“கடந்த வாரமே எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தோம். ஆனால் பாக்கியை திரும்பிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆறு விமான நிலையங்ளில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்துப்பட்டுள்ளது” எனவும் அவர் விளக்கினார்.
இச்சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் சுமார் 2500 கோடி அவசர நிதி உதவி கேட்டிருக்கிறது.
சீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும்! அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா
இந்திய ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சி
"அரசிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த ஆண்டில் எங்களுடைய செயல்பாடு நல்லபடியாகவே உள்ளது. லாபம் ஈட்டும் நிலையை நோக்கி ஆரோக்கியமான முறையில் இயங்கி வருகிறோம். சட்டச் சிக்கல்களுக்கு இடையிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்." என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகபட்சம் 90 நாட்கள் வரை பாக்கி வைத்திருப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் பாக்கி 200 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் உள்ளது. 60 கோடி ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள். அது கடலில் ஒரு துளி நீர் போலத்தான்” என்று தெரிவித்தார்.
ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்
“கடந்த வாரமே எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தோம். ஆனால் பாக்கியை திரும்பிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆறு விமான நிலையங்ளில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்துப்பட்டுள்ளது” எனவும் அவர் விளக்கினார்.
இச்சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் சுமார் 2500 கோடி அவசர நிதி உதவி கேட்டிருக்கிறது.
சீக்கிரம் ரூ.2,500 கோடி வேணும்! அரசிடம் கையேந்தும் ஏர் இந்தியா