ஆப்நகரம்

விமான டிக்கெட் உயரப் போகுது... இனி கஷ்டம்தான்!

ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் உயர்த்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2021, 7:03 pm
விமானப் பயணங்களில் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவதற்காக விமான பாதுகாப்பு கட்டணத்தை (ASF) உயர்த்த பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, உள்நாட்டு விமானப் பாதுகாப்புக் கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, சர்வதேசப் பயணங்களுக்கான விமானப் பாதுகாப்புக் கட்டணம் ரூ.114.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமானப் பாதுகாப்புக் கட்டணம் ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உயர்த்தப்படுகிறது. இதற்கு முன் கடைசியாக 2020 செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 30 வரையில் சர்வதேச விமானப் பயணங்கள் நி
Samayam Tamil air

றுத்தப்பட்டுள்ளன என்பதால் அதன் பிறகு புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விமானப் பாதுகாப்புக் கட்டணத்திலிருந்து ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 2 வயதுக்குக் குறைவான குழந்தைகள், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் ஹோல்டர்ஸ், இந்திய ஏர் போர்ஸ் அமைப்பு சார்பாக அலுவலகம் சார்ந்த விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி தூதர்கள் போன்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ஹோலி பண்டிகைக்கு முன் பணம்!!

சென்ற ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கொரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்களும் உள்நாட்டு விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டதால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதேநேரம், விமானப் பாதுகாப்புச் சேவைகளுக்கான செலவுகளும் அதிகமாக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தற்போது விமானப் பாதுகாப்புக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமானக் கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் விமானப் பயணிகளுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்