ஆப்நகரம்

இனி அதிக விமானங்கள் பறக்கலாம்... மத்திய அரசு அனுமதி!

85 சதவீத விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 18 Sep 2021, 10:05 pm
2020ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் சரக்கு விமானங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் உள்நாட்டினருக்கான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மே 25ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
Samayam Tamil airlines


இரண்டு மாதங்கள் தடைக்குப் பிறகு அப்போதுதான் 33 சதவீத விமானங்கள் இயங்க அனுமதி கிடைத்தது. அதாவது ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையில் 33 சதவீத அளவு மட்டுமே இயக்கப்பட வேண்டும். அதன் பின்னர், இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதிமுதல் 72.5 சதவீத விமானங்கள் இயங்க அனுமதி கிடைத்தது. ஜூன் 1 முதல் ஜூலை 5 வரை 65 சதவீத விமானங்களும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 வரை 65 சதவீத விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆதார் - பான் இணைப்பு கடைசி தேதி நீட்டிப்பு!
இந்நிலையில் தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 85 சதவீதம் அளவு உள்நாட்டு விமானங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் ஊரடங்கு அறிவிப்பு வெளியானவுடன் விமான நிறுவனங்களுக்குப் பெருத்த வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. ஊரடங்கு காலத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டதால் இத்துறையில் பலருக்கு வேலைவாய்ப்பும் பறிபோனது. ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதால் அத்துறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்