ஆப்நகரம்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஷாக்... ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு!

மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை 25 சதவீதம் வரையில் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Nov 2021, 1:55 pm
இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்தது. வாடிக்கையாளர்களின் வாயிலாகக் கிடைக்கும் வருவாயைப் பெருக்கவும், அதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் தற்போது ஏர்டெல் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அதற்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள ஏர்டெல் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil airtel


அதாவது ஏர்டெல் சிம் பயன்படுத்துபவர்கள் இனி அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். மொபைல் டாரிஃப் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, இனி 99 ரூபாய் பிளான் தான் ஏர்டெல் நெட்வொர்க்கின் குறைந்தபட்ச பிளானாக இருக்கும். இதற்கு முன்னர் 79 ரூபாயாக இருந்த திட்டம்தான் இப்போது 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு வருகிற நவம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26ஆம் தேதிக்குப் பிறகு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். புதிய அறிவிப்பின்படி மாற்றப்பட்டுள்ள பிளான்களின் விவரம் இதோ...

வாய்ஸ் பிளான்:

ரூ.79 -->> ரூ.99
ரூ.149 -->> ரூ.179
ரூ.249 -->> ரூ.299
ரூ.298 -->> ரூ.359
ரூ.399 -->> ரூ.479
ரூ.449 -->> ரூ.459
ரூ.379 -->> ரூ.455
ரூ.598 -->> ரூ.719
ரூ.698 -->> ரூ.839
ரூ.1498 -->> 1799
ரூ.2498 -->> ரூ.2999

டேட்டா டாப் அப் பிளான்:

ரூ.48 -->> ரூ.58
ரூ.98 -->> ரூ.118
ரூ.251 -->> ரூ.301

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியோ மற்றும் ஜியோ நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது மொபைல் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளர்கள் வாயிலான வருவாய் (ARPU) மற்றும் 5ஜி சேவை விரிவாக்கம் போன்ற காரணங்களுக்கு நெட்வொர்க் நிறுவனங்கள் இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்