ஆப்நகரம்

இது என்னடா ஏர்டெலுக்கு வந்த சோதனை!

ஏர்டெல் நிறுவனத்துக்கு நான்காவது காலாண்டில் ரூ.5,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 1:41 pm
நீண்ட காலமாக இந்தியாவின் நம்பர் 1 நெட்வொர்க் நிறுவனமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஏர்டெல் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கியது முதலே ஏர்டெல் நிறுவனத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பமானது. தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும், சந்தைப் பங்கையும் ஜியோவிடம் இழந்த ஏர்டெல் பெருத்த வருவாய் இழப்புக்கு ஆளானது. சந்தையில் ஜியோ முதலிடத்துக்குச் செல்லவே, ஜியோவின் போட்டியால் ஒன்றாக இணைந்த வோடஃபோன் - ஐடியா நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஏர்டெல் நெட்வொர்க் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
Samayam Tamil airtel


இந்நிலையில், ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5,237 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2019அம் ஆண்டின் இதே காலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.107.2 கோடி லாபம் ஈட்டியிருந்தது. ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் குறைந்திருந்தாலும், அது தனது கடன் அளவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது. அதாவது, 2019 மார்ச் மாத நிறைவில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.1,08,235 கோடியாக இருந்த நிலையில், 2020 மார்ச் மாத நிறைவில் இக்கடன் அளவு ரூ.88,251 கோடியாகக் குறைந்துள்ளது.

வங்கிக்கே போகாமல் வங்கிக் கணக்கு திறப்பது எப்படி?

ஏர்டெல் நிறுவனத்தின் வருவாயும் ஜனவரி - மார்ச் காலாண்டில் அதிகரித்திருக்கிறது. இக்காலாண்டில் ஏஎர்டெல் நிறுவனத்துக்கு ரூ.23,723 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது 2019 ஜனவரி - மார்ச் காலாண்டு வருமானத்தை விட 15.1 சதவீதம் அதிகமாகும். வாடிக்கையாளர் வாயிலான வருவாயைப் பொறுத்தவரையில், வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 154 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 123 ரூபாயாக மட்டுமே இருந்தது.

பங்குச் சந்தை நிலவரம்... இன்று யாருக்கெல்லாம் லாபம்?

2020 மார்ச் காலாண்டில் 423 ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 423 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 404 மில்லியனாக இருந்தது. அதாவது வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 4.9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை, மொத்த வருவாயில் ஏர்டெல் நிறுவனம் வளர்ச்சி கண்டிருந்தாலும் நிகர லாபத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஏர்டெல் நிறுவனத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் தொடர்ந்து இயங்க அதிக முதலீட்டைத் திரட்டுவதும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதும் முக்கியமாகியுள்ளது. மறுபுறம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்து சந்தையில் கோலோச்சி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்