ஆப்நகரம்

நேர்மையான மக்களின் வலி குறைக்கப்படும் : ஆர்பிஐ ஆளுநர்

ரூபாய் நொட்டு வாபஸ் விவகாரத்தில் நேர்மையான மக்களின் வலியை குறைபதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 27 Nov 2016, 9:26 pm
டெல்லி : ரூபாய் நொட்டு வாபஸ் விவகாரத்தில் நேர்மையான மக்களின் வலியை குறைபதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil all steps being taken to ease genuine pain of honest citizens says rbi governor urjit patel
நேர்மையான மக்களின் வலி குறைக்கப்படும் : ஆர்பிஐ ஆளுநர்


மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்ற பிறகு ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் முதன்முறையாக ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ," ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேர்மையான மக்களின் வலியை குறைபதற்காக நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் பணவரத்து அதிகரித்துள்ளது. மேலும் தேவைக்குஏற்ப புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளிலும் , ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவருகின்றது.

புதிய ரூபாய் நோட்டுகள் அளவும், அடர்த்தியும் பழைய ரூபாய் நோட்டுக்களில் இருந்து மாறுபற்றுவதால் இவற்றை கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது. பொதுமக்கள் மிண்ணனு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவேண்டும்.இதன் மூலம் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவு பலப்படும்." என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்