ஆப்நகரம்

Govt Bonds: எப்படி முதலீடு செய்யணும்? - செமயா சம்பாதிக்கலாம்!

அரசு பத்திரங்களில் எப்படி முதலீடு செய்வது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 12 Aug 2020, 12:56 pm

ரிஸ்க் இல்லாத முதலீடுகளை விரும்புவோருக்கு அரசு பத்திரங்கள் சிறந்த சாய்ஸ்களில் ஒன்று. எனினும், முதன்முறையாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு அரசு பத்திரங்களில் எப்படி எளிதாக முதலீடு செய்வது என தெரிந்துகொள்வது அவசியம்.
Samayam Tamil முதலீடு


அரசு செக்யூரிட்டீஸ் அல்லது அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய முதலில் தேசிய பங்குச் சந்தையின் NSE goBID ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டும். இது மொபைல் ஆப்பாகவும், இணையதளமாகவும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய உதவுகிறது. இதைப் பயன்படுத்தி கஜாலா பில் (Treasury bills), மத்திய அரசு பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

Fixed Deposit: அதிக வட்டி தரும் வங்கிகள்... சூப்பரா சம்பாதிக்கலாம்!

இதற்கு முன் NSE goBID ஆப்பில் முழுமையாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்ய இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

*தகுதியுள்ள அனைத்து சில்லறை முதலீட்டாளர்களும் (தனிநபர், நிறுவனங்கள், கார்ப்பரேட், அறக்கட்டளை) தங்களது தேசிய பங்குச் சந்தை பங்கு தரகர்களின் மூலம் பதிவு செய்யலாம். இதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி இருக்கிறது. பான் எண், டீமாட் கணக்கு விவரங்கள், மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். ஆன்லைனில் சரிபார்ப்பு முடிந்தவுடன் ஒரே நாளில் NSE goBID கணக்கு கிடைத்துவிடும்.

*பான் எண் மற்றும் டிமாட் கணக்கு வைத்திருப்பவர்கள் கேஒய்சி பதிவு முகமைகள் மூலம் பதிவு செய்துள்ளலாம். இதற்கு சம்பந்தப்பட்ட முதலீட்டாளரின் ஆதார் எண், மொபைல் எண், இமெயில் ஆகியவை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியுடன் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த முறையில் ஒரே நாளில் NSE goBID கணக்கை பெற்றுவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்