ஆப்நகரம்

எஸ்பிஐ பென்சன் சேவா: ஈசியாக பயன்பெறுவது எப்படி?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஸ்பிஐ பென்சன் சேவா இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

Samayam Tamil 29 Jul 2020, 11:09 am

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி பென்சன் திட்டங்களுக்காக ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொது பென்சன்தாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது.
Samayam Tamil பென்சன்


அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... கொரோனா சமயத்தில் ஓய்வு பெற்றால் இது கிடைக்கும்!

எஸ்பிஐ பென்சன் சேவா தளத்தில் கீழ்கண்ட சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

* நிலுவை கணக்கு படிவங்களை (arrear calculation sheets) டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

* பென்சன் ரசீது/ Form 16 டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

* பென்சன் திட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

* முதலீடு தொடர்பான விவரங்கள்

* வாழ்வு சான்றிதழ் (Life certificate)

* பரிவர்த்தனை விவரங்கள்

எஸ்பிஐ பென்சன் சேவா இணையதளத்தை பயன்படுத்த முதலில் வாடிக்கையாளர் ஐடியை பெற வேண்டும். அதற்கு முதலில், உங்கள் பென்சன் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். பிறந்த தேதி, வங்கிக் கிளை, வங்கியில் பதிவு செய்த இமெயில் ஐடி ஆகியவற்றையும் வழங்க வேண்டும். புதிய பாஸ்வோர்ட் இட்டு உறுதிப்படுத்த வேண்டும். இதன்பின் இமெயிலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து கணக்கை செயல்படுத்த வேண்டும்.

இந்த துறைகளில் வேலைவாய்ப்பு உறுதி!

புதிய கணக்கு திறக்கப்பட்ட பின்னர் பென்சன் கட்டணம் தொடர்பான விவரங்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும். இமெயில் மூலமாகவோ, எஸ்பிஐ வங்கிக் கிளை மூலமாகவோ பென்சன் ரசீது பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு எஸ்பிஐ கிளையிலும் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். எல்லா கிளைகளிலும் ஜீவன்பிரமான் வசதி உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்