இந்தியாவின் ஆன்லைன் மின்னணு வர்த்தகச் சந்தையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இவ்வகை மின்னணு வர்த்தகத் தளங்கையும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே நமக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்க முடியும் என்பதோடு, இதில் பல்வேறு சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுவதால் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் தகவல் திருட்டு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருக்கின்றன. ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கைகளை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசானது கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது. இதற்கான வரைவறிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் தரவுகளை எப்படிக் கையாளப்போகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? முழு விவரம் இதோ...
ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் ஈகாமர்ஸ் துறையைக் கண்காணிக்கவும், தரவுகளை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி ஆய்வு செய்யும் உரிமையுடன் ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள கொள்கையின் படி புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசு கட்டுப்பாட்டு ஆணையம் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் source code மற்றும் algorithms ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்.
குவைத்தில் உள்ள இந்தியர்கள் வெளியேற்றம்... 8 லட்சம் பேருக்கு ஆபத்து?
இந்தியா - சீனா பிரச்சினயைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் விவரங்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற காரணங்களால்தான் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் அடுத்த 72 மணிநேரத்தில் இந்திய அரசுக்குக் கிடைக்கும் வகையில் தரவுகளை இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பெற்றோர்களுக்கு அரிய வாய்ப்பு!
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் நம்பர், வாடிக்கையாளர்கள் புகார் மற்றும் அவர்களின் மொபைல் எண், ஈமெயில் மற்றும் முகவரி உள்ளிட்ட விற்பனையாளர்களின் தகவல்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரம், பொருட்கள் தயாரிக்கப்பட்ட இடம் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் தகவல் திருட்டு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருக்கின்றன. ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கைகளை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசானது கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது. இதற்கான வரைவறிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் தரவுகளை எப்படிக் கையாளப்போகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? முழு விவரம் இதோ...
ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் ஈகாமர்ஸ் துறையைக் கண்காணிக்கவும், தரவுகளை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி ஆய்வு செய்யும் உரிமையுடன் ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள கொள்கையின் படி புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசு கட்டுப்பாட்டு ஆணையம் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் source code மற்றும் algorithms ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்.
குவைத்தில் உள்ள இந்தியர்கள் வெளியேற்றம்... 8 லட்சம் பேருக்கு ஆபத்து?
இந்தியா - சீனா பிரச்சினயைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் விவரங்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற காரணங்களால்தான் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் அடுத்த 72 மணிநேரத்தில் இந்திய அரசுக்குக் கிடைக்கும் வகையில் தரவுகளை இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பெற்றோர்களுக்கு அரிய வாய்ப்பு!
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் நம்பர், வாடிக்கையாளர்கள் புகார் மற்றும் அவர்களின் மொபைல் எண், ஈமெயில் மற்றும் முகவரி உள்ளிட்ட விற்பனையாளர்களின் தகவல்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரம், பொருட்கள் தயாரிக்கப்பட்ட இடம் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.