ஆப்நகரம்

சரக்குகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை... அமித்ஷா எச்சரிக்கை!

அத்தியாவசிய சரக்குகளை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 11:11 pm
கோவிட்-19 கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், சரக்குகள் பதுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil சரக்குகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை அமித்ஷா எச்சரிக்கை


இந்நிலையில், சரக்குகள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள் விநியோகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை கூடுதல் செயலாளர் புண்ய சைல ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 7) ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புண்ய சைல ஸ்ரீவஸ்தவா, சரக்குகளை பதுக்கி கள்ளச் சந்தையின் விற்பனை செய்வோர் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக தெரிவித்தார். மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அவர், இதுவரையில் அத்தியாவசிய சரக்குகள், சேவைகள் விநியோகம் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் லைஃப்லைன் உடான் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்கள் 200 டன் சரக்குகளை விநியோகித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் நிறைய விழாக்கள் வரவிருப்பதால், ஊரடங்கை சீராக நடைமுறைப்படுத்த உதவும்படி பல சமூகத் தலைவர்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்