ஆப்நகரம்

அந்த இமயமலை சாமியாரே இவர்தான்.. சித்ரா வழக்கில் திருப்பம்!

சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் தொடர்புடைய இமயமலை சாமியார் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2022, 2:02 pm
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் விசாரணை வளையத்தில் சிக்கினார்.
Samayam Tamil chitra ramakrishna


தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசியமான தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டதாக பிப்ரவரி 11ஆம் தேதி செபி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது.

மேலும், ஆனந்த் சுப்ரமணியனை தேசிய பங்குச் சந்தையின் சிஓஓ அதிகாரியாக நியமித்ததிலும் சித்ரா முறைகேடு செய்துள்ளதாக செபி தெரிவித்தது. எல்லா தவறுகளும் தேசிய பங்குச் சந்தை நிர்வாகக் குழுவிற்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும் செபி தெரிவித்துள்ளது.

ராக்கெட் வேகத்தில் கச்சா எண்ணெய்.. பெட்ரோல் விலை என்னாகும்?
இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. மேலும் அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை செபியிடம் இருந்து சிபிஐ பெற்றுள்ளது.

எனினும், பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட இமயமலை சாமியார் யார் என்பது பெரும் சந்தேகமாக இருந்தது. இந்நிலையில், அந்த இமயமலை சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன்தான் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் அசோக் சாவ்லா 201ஆம் ஆண்டில் செபிக்கு எழுதியுள்ள கடிதத்தின்படி, ஆனந்த் சுப்ரமணியன்தான் அந்த இமயமலை சாமியார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்