ஆப்நகரம்

அரசு நிறுவனத்தை வளைத்துப் போட்ட ரத்தன் டாட்டா.. மீண்டும் திறக்கும் ஆலை!

2 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க தயாராக உள்ள அரசு நிறுவனம்.. எல்லாம் ரத்தன் டாடா கை வைத்த நேரம்தான்.

Samayam Tamil 13 Aug 2022, 10:52 am
தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மத்திய அரசு மற்றொரு பெரிய நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இந்தியாவின் பழம்பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவின் கைகளில் அந்த அரசு நிறுவனம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்ததால்தான் இந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது.
Samayam Tamil ratan tata


நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் (NINL) என்ற இந்த ஆலை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மூடப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனம் திறக்க தயாராக உள்ளது.

நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் ரத்தன் டாடாவின் கைகளுக்குச் சென்றவுடன், அதன் அதிர்ஷ்டம் மாறத் தொடங்கியது. அடுத்த 3 மாதங்களில் இந்த ஆலையைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயதிதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டி.வி.நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போதுள்ள ஊழியர்களை கொண்டு இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலையை மீண்டும் துவக்கத் தயாராக உள்ளோம். அடுத்த மூன்று மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கி, அடுத்த 12 மாதங்களில் உற்பத்தித் திறனை அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

நீலாச்சல் இஸ்த் நிகாம் லிமிடெட் ஒடிசாவின் கலிங்கநகரில் 1.1 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஒருங்கிணைந்த எஃகு ஆலையைக் கொண்டுள்ளது. 2021 மார்ச் 31 நிலவரப்படி இந்நிறுவனம் ரூ.6,600 கோடிக்கு மேல் கடன் சுமை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்