ஆப்நகரம்

சென்னையில் கொல மாஸ் ஏற்பாடு.. எலக்ட்ரானிக்ஸ் கோட்டையாகும் தமிழ்நாடு!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 1800 கோடி ரூபாய் முதலீட்டில் சால்காம்ப் நிறுவனம் அதிரடி பிளான்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 15 Feb 2023, 11:02 am
இந்திய அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil apple supplier salcomp to expand its facility in sriperumbudur with investment of 1800 crore rupees
சென்னையில் கொல மாஸ் ஏற்பாடு.. எலக்ட்ரானிக்ஸ் கோட்டையாகும் தமிழ்நாடு!


ஆப்பிள் மையமான சென்னை

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு மொத்தமாக நிறுவனங்களை வளைத்துப் போட்டுவிட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் போன்ற நிறுவனங்கள் சென்னையில் ஆலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றன.

குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள்

இதுபோக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஓசூரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஆலையை அமைத்து ஆப்பிள் பொருட்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்யவிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், Salcomp, Flex போன்ற ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்களும் தமிழ்நாட்டில் ஆலை அமைத்துள்ளன. இதையடுத்து, Luxshare என்ற இன்னொரு நிறுவனமும் தமிழகத்துக்கு வர இருக்கிறது.

சால்காம்ப் நிறுவனம்

இப்படி, தெற்காசியாவில் ஆப்பிள் பொருட்கள் உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருமாறியுள்ளது. இதில், பின்லாந்தை சேர்ந்த சால்காம்ப் (Salcomp) நிறுவனம் ஏற்கெனவே சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து ஆப்பிள் ஐபோன்களுக்கு தேவையான சார்ஜர்களை உற்பத்தி செய்து வருகிறது.

கூடுதலாக ரூ.1800 கோடி முதலீடு

இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக 1800 கோடி ரூபாய் முதலீடு செய்ய சால்காம்ப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. முதலீட்டை மேலும் அதிகரிக்கவும் சால்காம்ப் நிறுவனத்துக்கு திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் 210 ஏக்கர் பரப்பில் சால்காம்ப் ஆலை இருக்கிறது.

சால்காம்ப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இன்னும் பயன்படுத்தப்படாத நிலம் நிறைய இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கும், உற்பத்தியை விரிவாக்கம் செய்யவும், ஊழியர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவும் சால்காம்ப் திட்டமிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்

தற்போது சென்னை சால்காம்ப் ஆலையில் 12000 ஊழியர்களை வேலை செய்கின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கையை 25000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 80% ஊழியர்கள் பெண்களாக இருப்பார்கள் எனவும், பெண் ஊழியர்களுக்கு விடுதி அமைத்து தரப்படும் எனவும் சால்காம்ப் தெரிவித்துள்ளது.

உற்பத்தி டார்கெட்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சால்காம்ப் ஆலையில் ஆண்டுக்கு 100 மில்லியன் சார்ஜர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் சார்ஜர் மட்டுமல்லாமல் மற்ற பொருட்களையும் உற்பத்தி செய்ய சால்காம்ப் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் கனவில் மைல்கல்

இது, உலகளவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாட்டின் இலக்கில் முக்கிய மைல்கல்லாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் மொத்த எலக்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 20% பங்கு உள்ளது. உலகளவில் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறுவதற்கு பல்வேறு நிறுவனங்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது.

இதனால், எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகுவது மட்டுமல்லாமல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் செழிப்பதற்கு வழிவகை ஏற்படும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்