ஆப்நகரம்

பனைத் தொழிலுக்கு புதிய திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிறப்புப் பனைத் தொழில் திட்டத்தின் கீழ் பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் விருப்பமுள்ள நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Aug 2020, 7:36 pm
நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான பனைமரங்கள் உள்ளன. பனை மரங்களிலிருந்து சூரிய உதயத்துக்கு முன்பாக எடுக்கப்படும் பதநீர் சுவையான பானமாக இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பதநீர் பரவலாக அருந்தப்படுகிறது. ஆனால், இதை முறையாக சந்தைப்படுத்தாததால் வர்த்தக ரீதியாகப் பதநீரை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. பதநீரை முறையாக சந்தைப்படுத்தினால் இவற்றிலிருந்து மிட்டாய்கள், மில்க் சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம் மற்றும் பாரம்பரிய இனிப்பு வகைகள் தயாரிக்க முடியும் என்று சிறு குறு மற்று நடுத்தர தொழில் துறை அமைச்சகம் கூறுகிறது.
Samayam Tamil palm


மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் பதநீரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பதநீரை வர்த்தக ரீதியான குளிர்பானமாக மாற்றப் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தும் சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ரூ.500 கோடி அளவுக்கு பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வர்த்தக ரீதியாகத் தயாரிக்கும் போது இந்த வருவாய் பல மடங்காக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பதநீர் மற்றும் பனை வெல்லம் தயாரிப்பதற்கான விரிவான திட்டத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ளது.

பயிர்களைத் தாக்காத கொரோனா நோய்... விவசாயிகள் மகிழ்ச்சி!

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கிராமப்புற ஏழை எளிய கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், பனை கருப்பட்டி, பனை ஓலையிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும் சந்தைப் படுத்தவும், காதி கிராம தொழில்கள் ஆணையம் நிதியுதவியுடன் கூடிய புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பாரம்பரியமான தொழில்களைப் புனரமைப்பதற்காகவும் அதன் மூலம் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிரந்தர வருமானம் ஈட்டும் வகையிலும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Sbi ATM: உங்களது பணத்துக்கு ஆபத்து... வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு!

இத்திட்டத்தின் கீழ் பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை http://kviconline.gov.in/sfruti என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்