ஆப்நகரம்

ஏற்றம் தந்த ஏற்றுமதி.. ஏப்ரலில் முன்னேற்றம்!

சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வணிக ஏற்றுமதி 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 13 May 2022, 4:03 pm
இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற ஏப்ரல் மாதத்தில் 40.19 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம், எலெக்ட்ரானிக் பொருட்கள், ரசாயனம் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil export


இறக்குமதியைப் பொறுத்தவரையில், ஏப்ரல் மாதத்தில் 60.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது 30.97 சதவீத வளர்ச்சியாகும். பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் மொத்தம் 20.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 87.54 சதவீத உயர்வாகும். நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் 4.93 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆபீசுக்கு வர முடியாது.. அந்த வேலையே வேணாம்! ஆப்பிளுக்கு வந்த சோதனை!!
தங்கம் இறக்குமதியில் 72 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1.72 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்தில் இதன் மதிப்பு 6.23 பில்லியன் டாலராக இருந்தது. ஏற்றுமதியில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 15.38 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதன் ஏற்றுமதி மதிப்பு 9.2 பில்லியன் டாலர் ஆகும். பெட்ரோலியம் பொருட்கள் 113.21 சதவீத வளர்ச்சியுடன் 7.73 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்