ஆப்நகரம்

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருதா இல்லையா? இப்படி செக் பண்ணுங்க!

மானியம் வரலனா என்ன பண்ணுவீங்க?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 Mar 2023, 3:38 pm
சமையல் சிலிண்டருக்கு நிறையப் பேருக்கு மானியம் வரவில்லை என்று கூறுகின்றனர். அது வந்துவிட்டதா என்று இப்படி பார்க்கலாம்.
Samayam Tamil are we getting subsidy on gas cylinder check online like this
கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருதா இல்லையா? இப்படி செக் பண்ணுங்க!


சிலிண்டர் மானியம்!

சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது.

​மானியம் நிறுத்தம்!

அரசு தரப்பிலிருந்து மானியம் நிறுத்தப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனாலும் நிறையப் பேருக்கு சமையல் சிலிண்டர் மானியம் வருகிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. மானியம் வரவே இல்லை என்று பலர் கூறினர். எனினும் சென்ற ஆண்டில் மானியத் தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியது.

செக் பண்றது எப்படி?​

நிறையப் பேருக்கு மானியத் தொகை வந்ததா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். அதை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்து கொண்டேஆன்லைன் மூலமாகவே பார்க்கலாம்.

​இதுதான் வழி!

Mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று மெயின் பேஜில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படத்தில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே புதிய பக்கம் ஓப்பன் ஆகும். அதிலுள்ள பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்களுடைய மொபைல் நம்பர், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், ஏஜென்சி பெயர் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்க வேண்டும். இப்போது புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம்.

​புகார் கொடுக்கலாம்!

ஒருவேளை உங்களுக்கு மானியத் தொகை வராமல் இருந்தால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைத்து புகாரளிக்கலாம். புகார் கொடுத்த பிறகு உங்களுடைய மானியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்