ஆப்நகரம்

"மல்லையா கடனை தள்ளுபடி செய்யவில்லை”-எஸ்.பி.ஐ வங்கி மறுப்பு..!

மல்லையா உட்பட 63 நபர்கள் வைத்துள்ள 7000 ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை ஸ்டேட் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

TNN 17 Nov 2016, 1:55 pm
மல்லையா உட்பட 63 நபர்கள் வைத்துள்ள 7000 ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை ஸ்டேட் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Samayam Tamil arundhati bhattacharya denied the rumours about vijay mallyas dept
"மல்லையா கடனை தள்ளுபடி செய்யவில்லை”-எஸ்.பி.ஐ வங்கி மறுப்பு..!


தொழிலதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரின் ரூ.7,016 கோடி மதிப்பிலான வாராக்கடனை எஸ்.பி.ஐ நிறுவனம் தள்ளுபடி செய்துவிட்டதாக நேற்று தகவல் பரவியது.தவிர்க்க முடியாத சூழலில் இந்த கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் வங்கியின் வசூலிக்கப்பட்ட கடன்களாகக் கருதப்படுவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தகவல் குறித்து சமூக.வலைதளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று இந்த தகவலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “மல்லையா உட்பட யாருடைய கடனையும் எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்யவில்லை.கடன் வாங்கியவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் தப்பித்து விட முடியாது.” என அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மல்லையா கடன் தள்ளுபடி குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Arundhati Bhattacharya denied the rumours about Vijay Mallya's dept

அடுத்த செய்தி

டிரெண்டிங்