கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கலால் வரியைக் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட மே 20ஆம் தேதிக்கான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2013ஆம் ஆண்டு இருந்த உச்ச விலையையும் தாண்டியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.24 ரூபாய் ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 67.57 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி பெட்ரோல் டீசல் விலை கடந்த செப்டம்பர் 14, 2013ல் இருந்த அதிகபட்ச விலையைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அப்போது 76.06 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைக் குறைத்துவிட்டது, வெனிசுலா அரசில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை” ஆகியவைதான் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் பிரதான் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வதைத் தடுத்து சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, கலால் வரியைக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை ரூ.1.61 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் ரூ.1.64 உயர்வு கண்டுள்ளது. முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டதும் நினைவூட்டத்தக்கது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட மே 20ஆம் தேதிக்கான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2013ஆம் ஆண்டு இருந்த உச்ச விலையையும் தாண்டியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.24 ரூபாய் ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 67.57 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி பெட்ரோல் டீசல் விலை கடந்த செப்டம்பர் 14, 2013ல் இருந்த அதிகபட்ச விலையைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அப்போது 76.06 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைக் குறைத்துவிட்டது, வெனிசுலா அரசில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை” ஆகியவைதான் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் பிரதான் கூறியுள்ளார்.
கடந்த மே14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை ரூ.1.61 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் ரூ.1.64 உயர்வு கண்டுள்ளது. முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டதும் நினைவூட்டத்தக்கது.