ஆப்நகரம்

500 கோடியில் தொழிற்சாலை அமைக்கும் அசோக் லேலாண்ட்..!

கனரக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் 500 கோடி ரூபாயில் தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

TNN 10 Oct 2016, 7:47 pm
கனரக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் 500 கோடி ரூபாயில் தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
Samayam Tamil ashok leyland to set up rs 500 crore assembly plant in telanagana
500 கோடியில் தொழிற்சாலை அமைக்கும் அசோக் லேலாண்ட்..!


இந்த புதிய திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் தெலங்கானா அரசுடன் கையெழுத்தாகியுள்ளது.இந்த புதிய தொழிற்சாலை மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பஸ் மற்றும் டிரக் ஆகியவற்றின் உதிரி பாகங்கள் இணைக்கும் வேலை நடைபெறும்.இந்த தொழிற்சாலைக்கான நிலமும் தெலங்கானா அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 500 கோடி ரூபாய் பல கட்டங்களாக முதலீடு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறையை வளர்ச்சியடையச் செய்ய இந்த திட்டம் ஊக்கமாக அமையும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

English Summary:

Ashok Leyland will set up a plant in Telangana at an investment of Rs 500 crore

அடுத்த செய்தி

டிரெண்டிங்