ஆப்நகரம்

டீ விலை ரூ.39,001! சாதனை படைத்த அசாம்!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் ஒரு கிலோ டீ ரூ.39,001க்கு விற்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 3:58 pm
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் ஒரு கிலோ டீ ரூ.39,001க்கு விற்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil pic


அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் மனோகரி டீ எஸ்டேட்டில் விளைந்த தேயிலை மூலம் தயாரிக்கப்பட்ட டீ செவ்வாய்க்கிழமை ஏலமிடப்பட்டது. உயர்ரக தேயிலைகளுக்கான ஏலமிடும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒரு கிலோ டீ ரூ. 39,001 க்கு வாங்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் புதிய சாதனையாக அமைந்துள்ளது.

மனோகரி கோல்டு டீ என்று பெயரிடப்பட்ட இந்த டீயை கவுகாத்தியைச் சேர்ந்த சவுரப் டீ டிரேடர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் அகமதாபாத் மற்றும் டெல்லி வரை டீ விநியோகம் செய்கிறது.

அது பற்றி கருத்து தெரிவித்துள்ள சவுரப் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எல்.மகேஷ்ஸ்வரி, “எங்களது வாடிக்கையாளர்கள் எப்போதும் உயர்தரமான டீயை எதிர்பார்க்கிறார்கள். ஏற்கெனவே, டோனி ப்லோ டீ எஸ்டேட்டில் ஒரு கிலோ டீ 18,801 ரூபாய் என்ற விலையில் வாங்கினோம்.” என்று கூறுகிறார்.

டீயை ஏலம் விட்ட மனோகரி டீ எஸ்டேட் உரிமையாளர் ராஜன் லோஹியாவின் வழிகாட்டுதலில் சி.கே.பிரஷார் என்பவர் மனோகரி கோல்டு டீயை தயாரித்துள்ளனர். ஏலத்தில் தங்களது டீ சாதனை படைத்துள்ளது பற்றி கூறியுள்ள லோஹியா, “இந்த டீயை பார்க்கும் போது 24 காரட் தங்கத்தைப் போல இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்