ஆப்நகரம்

முதியோர்களுக்கு லாபம் தரும் சூப்பர் பென்சன் திட்டம்!

அடல் பென்சன் திட்டத்தின் கீழ் 11 சதவீதம் கூடுதல் லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 22 Sep 2020, 6:34 pm
அமைப்பு சாரா துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாக அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 சதவீதம் கூடுதல் ரிட்டன் லாபம் கிடைத்துள்ளது. எல்.ஐ.சி. பென்சன் ஃபண்ட் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 10.94 சதவீத லாபம் தந்துள்ளது. அதேபோல எஸ்பிஐ பென்சன் ஃபண்ட் 11.24 சதவீத லாபத்தையும், யூடிஐ ரிட்டயர்மெண்ட் சொலூசன்ஸ் 11.01 சதவீத லாபத்தையும் தந்துள்ளன. இதனால் வாடிக்கையாளருக்கு என்ன பயன் என்று பார்க்கலாம்.
Samayam Tamil pension


அடல் பென்சன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 60 வயதை நிறைவுசெய்யும் போஒது குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையில் ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் வாடிக்கையாளரின் பங்களிப்புத் தொகையானது நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அதில் கூடுதல் பயன் கிடைக்கிறது. குறைந்தபட்ச உத்தரவாத பென்சன் தொகையை விட பங்களிப்புத் தொகை அதிகமாக இருக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.

பெட்ரோல் டோர் டெலிவரி: அரசு அறிவிப்பு!

அடல் பென்சன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு மே மாதத்துடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுவரையில் 2 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் இணைய முடியும். இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளரின் இறப்புக்குப் பின்னர் அவரது வாழ்க்கைத் துணைக்கு இந்த பென்சன் பணம் கிடைக்கும். இருவரும் இறந்துவிட்டால் நாமினிக்கு இந்த பென்சன் தொகை கிடைக்கும்.

கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு பென்சன் பங்களிப்புத் தொகைக்கான அபராதம் ரத்து செய்யப்பட்டு, ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்