ஆப்நகரம்

Pension: அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் அற்புதத் திட்டம்!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 4:11 pm

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Samayam Tamil Money


இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. அதாவது, வருமானம் குறையும்பட்சத்தில் அதை அரசே ஈடுசெய்யும்.

60 வயதுக்கு பின் மாதம் 5000 ரூபாய் பென்சன் பெற வேண்டுமெனில் இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். அப்போது முதல் 60 வயது வரையில் மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

இளம் வயதில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த சாய்ஸ்!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். 8 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

இது வாழ்நாள் முழுவதுமான பென்சன் என்பது முக்கிய அம்சம். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும்.

இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைவது அதிக பலன்களை தரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்