ஆப்நகரம்

ATM பணம் எடுக்க ரூல்ஸ் மாறிடுச்சு.. இனி அதிகம் செலவாகும் மக்களே!

ஜனவரி முதல் மாறப்போகும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை விதிமுறைகள்...

Samayam Tamil 27 Dec 2021, 10:37 am
ஏடிஎம் கார்டு (டெபிட் கார்டு) பயன்படுத்துவோருக்கு 2022ஆம் ஆண்டு பல்வேறு திடீர் மாற்றங்களுடன் வருகிறது. ஏடிஎம் கார்டு ஷாப்பிங் பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டது மட்டுமல்லாமல், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
Samayam Tamil cash withdrawal


பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் ஏடிஎம் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இப்புதிய விதிமுறைகள் ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு வைத்து ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். மெட்ரோ நகரங்களில் மூன்று முறை மட்டும் இலவசமாக பணம் எடுக்க முடியும்.

சமையல் சிலிண்டருக்கு 2700 ரூபாய் தள்ளுபடி.. சூப்பர் சலுகை!
இதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி முதல் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்த ஒவ்வொரு முறையும் கார்டு எண் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் பதிவிட வேண்டும். உங்களின் கார்டு விவரங்களை எந்தவொரு நிறுவமும் சேமித்து வைக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்