ஆப்நகரம்

ஆட்டோ தொழிற்சாலை என்ன டீக்கடையா? ஒரு இரவில் திறக்க, மூடுவதற்கு: ராஜிவ் பஜாஜ் காட்டம்!!

ஆட்டோ தொழிற்சாலை என்ன டீக்கடையா? ஒரு இரவில் திறப்பதற்கும், மூடுவதற்கும் என்று காட்டமாக பஜாஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கேட்டுள்ளார்.

Samayam Tamil 16 Jul 2019, 12:51 pm

Gold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை எவ்வளவு?undefinedவரும் 2020ஆம் ஆண்டில் இருந்து எங்களது எலெக்டிரிக் வாகனங்களை வாங்க விரும்புவோருக்கு நாங்கள் தாயாரித்துக் கொடுப்போம். இறக்குமதி செய்து கொடுப்பவர்கள் இன்றே கூட அதை செய்வார்கள். ஆனால், இறக்குமதி வாகனங்களை அதிகம் யாரும் வாங்க மாட்டார்கள். எதையும் எடுத்தவுடன் செய்து விட முடியாது. நீச்சலுக்கு செல்லும்போது, உடனடியாக தண்ணீருக்குள் குதித்து விட முடியாது.

சென்னையில் ஹூண்டாய் மின்சார கார் தயாரிப்பு: ரூ.2000 கோடி முதலீடு

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், கடனில் பெறப்படும் வாகனங்களுக்கான வட்டியில் தள்ளுபடி, புதிய எலெக்டிரிக் வாகனம் வாங்குவோருக்கு பதிவுக் கட்டணம் இல்லை என்று பல சலுகைகளை அறிவித்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளுக்கு மாற வேண்டும் என்று வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு உத்தரவும் இடப்பட்டு இருந்தது.
Samayam Tamil rajiv Bajaj


இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தற்போது வாகன தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனத்தினர் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநர் ராஜிவ் பஜாஜ் பேட்டி அளித்து இருந்தார். அதில் கடுமையாக மத்திய அரசின் திட்டத்தை சாடியுள்ளார்.

அவர் அளித்து இருந்த பேட்டியில், ''25 மில்லியன் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும்போது எப்படி ஒரே இரவில் மின்சார வாகன தயாரிப்புக்கு மாறுவது. இது என்ன டீக்கடையா? ஒரே இரவில் திறப்பதற்கும், மூடுவதற்கும். அதேசமயம், மானியம் அளிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். ஆனால், combustion engine இல்லாமல் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கொண்டு வர வேண்டும் என்ற வரைவு மசோதா அறிவிப்பை 110 சதவீதம் எதிர்க்கிறேன். உலகளவில் புகழ் பெற்று இருக்கும், ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் மற்றொன்றை அழித்து விட்டு, மற்றொன்றை கொண்டு வர வேண்டும் என்ற முடிவை கடுமையாக எதிர்க்கிறேன். அடுத்து இவர்கள் ஸ்மார்ட் சிட்டி பற்றி பேசுகிறார்கள். உதாரணத்திற்கு புனேயில் சுத்தமாக இருக்கும் ஒரு இடத்தை கூறுங்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுத்தம் கூட இன்று இல்லை. எங்கேயோ சில இடங்களை சுத்தம் செய்துவிட்டு தூய்மையான இந்தியா பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டிக்கு முதலில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
வரி ஏய்ப்பு செய்துவிட்டு அவ்வளவு ஈசியா தப்ப முடியாது! இன்று முதல் புதிய விதிகள் அமல்
இன்று என்னுடைய வாகனம் உலகளவில் பெயர் பெற்றுள்ளது. திடீரென எலெக்டிரிக் வாகனங்களுக்கு மாறுங்கள் என்று சொல்லும்போது, உங்களைவிட தரமான தயாரிப்பில் நான் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டு வந்தால், அரசு உங்களது வாகனத்தை தடை செய்யுமா?'' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்