சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இப்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 38 பேர் கொரோனாவுக்கு இரையாகியுள்ளனர். மேலும், 1637 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும் பொதுமக்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில் துறையினர் தரப்பிலிருந்தும் அரசு அமைப்புகள் தரப்பிலிருந்தும் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக அதிக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் அவசர கால நிதியில் பல்வேறு தரப்பினர் பணம் கொடுத்து உதவி வருகின்றனர். கார்பரேட் நிறுவனங்கள் பல தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கியுள்ளன. இதற்குப் பக்க பலமாக கொரோனா பாதிப்புக்காக கார்பரேட் நிறுவனங்கள் செலவிடும் தொகையானது கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகக் கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ.100 கோடியும், டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடியும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடியும் வழங்கியுள்ளன.
சமையல் சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தன் பங்குக்கு ரூ.1,125 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில், விப்ரோ ரூ.100 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் ரூ.25 கோடிட்யும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடியும் வழங்குகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கவும், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கவும், மருத்துவ உபகரணங்களுக்கும் இந்த நிதி அரசின் வழிகாட்டுதலின் பேரில் பயன்படுத்தப்படும் என்று விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளையைச் சேர்ந்த 1,600 பேர் அடங்கிய குழு, கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையினர் தரப்பிலிருந்தும் அரசு அமைப்புகள் தரப்பிலிருந்தும் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக அதிக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் அவசர கால நிதியில் பல்வேறு தரப்பினர் பணம் கொடுத்து உதவி வருகின்றனர். கார்பரேட் நிறுவனங்கள் பல தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கியுள்ளன. இதற்குப் பக்க பலமாக கொரோனா பாதிப்புக்காக கார்பரேட் நிறுவனங்கள் செலவிடும் தொகையானது கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகக் கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ.100 கோடியும், டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடியும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடியும் வழங்கியுள்ளன.
சமையல் சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தன் பங்குக்கு ரூ.1,125 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில், விப்ரோ ரூ.100 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் ரூ.25 கோடிட்யும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடியும் வழங்குகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கவும், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கவும், மருத்துவ உபகரணங்களுக்கும் இந்த நிதி அரசின் வழிகாட்டுதலின் பேரில் பயன்படுத்தப்படும் என்று விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளையைச் சேர்ந்த 1,600 பேர் அடங்கிய குழு, கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.