ஆப்நகரம்

வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்ட இந்திய வாராக்கடன்

இந்தியாவில் உள்ள வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட வாராக்கடன்களின் அளவு வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் ரூ. 9.53 லட்சம் கோடி அளவிற்கு உயா்ந்துள்ளது.

TOI Contributor 11 Oct 2017, 8:15 pm
இந்தியாவில் உள்ள வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட வாராக்கடன்களின் அளவு வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் ரூ. 9.53 லட்சம் கோடி அளவிற்கு உயா்ந்துள்ளது.
Samayam Tamil bad debt very high level in india
வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்ட இந்திய வாராக்கடன்


கடந்த ஜூன் மாத இறுதி வரை கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் வாராக்கடன் தொடா்பான தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவின் 3வது பொிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாட்டில், வாராக்கடன்களை வசூலிப்பதற்கோ, கட்டுப்படுத்தவோ இதுவரை எந்த பொிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஆா்.பி.ஐ.யிடம் இருந்து தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்தத் தகவலில் கடந்த ஜூன் மாதத்தின் இறுதி வரையிலான காலக்கட்டத்திற்கு முந்தைய 6 மாதங்களில் மட்டும் வாராக்கடன்களின் அளவு 5.8 அளவுக்கு அதிகாித்திருப்பது தொியவந்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் அளித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி தான் வங்கிகளுக்கு மிகப்பொிய லாபம். இதுபோன்ற வாராக்கடன்களால், வங்கிகளின் லாபம் குறைந்து புதிய கடன்கள் கொடுப்பதும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக பொிய நிறுவனங்கள் பெற்ற கோடிக்கணக்கான கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் சிறு, குறு நிறுவனங்களுக்கு இதுபோன்ற சமயங்களில் கடன் கொடுக்கும் அளவு குறைவது நேரடியாகவே நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

3 ஆண்டுகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி மந்தநிலையை அடைந்துள்ளது. 2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் நிலையல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்