ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்.. முடிவை மாற்றிய ஊழியர்கள்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2022, 3:52 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளதால் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bank employees deferred nationwide strike urging old pension scheme after iba agreed for talks
பழைய ஓய்வூதிய திட்டம்.. முடிவை மாற்றிய ஊழியர்கள்!


​வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் உள்ளடங்கிய United Forum of Bank Union (UFBU) கூட்டமைப்பு அறிவித்தது.

​லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்பு

ஜூன் 20ஆம் தேதி நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் போராட்டத்தில் நாடு முழுவதும் 7 லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.

​கோரிக்கைகள்

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய பென்சன் திட்டத்தை நீக்குவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் உயர்வு, வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.

​பழைய ஓய்வூதிய திட்டம்

2003ஆம் ஆண்டு வரை வங்கி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

​வங்கிகளுடன் பேச்சுவார்த்தை

இந்நிலையில், தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், ஜூலை 1ஆம் தேதி முதல் வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

​வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

இதையடுத்து, ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்