ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் இன்று திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.

TNN 29 Jul 2016, 7:25 am
புதுதில்லி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் இன்று திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.
Samayam Tamil bank employees strike today
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்


எஸ்பிஐ வங்கி உடன், அதன் துணை வங்கி நிறுவனங்களை ஒன்றிணைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ துணை வங்கிகள் மட்டுமின்றி அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும், எஸ்பிஐ வங்கியின் நேரடி ஊழியர்களாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவர்.

இதேபோன்று, ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12, 13-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் இந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதியன்று (இன்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்திருந்தது.

அதன்படி, வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 8500 வங்கிகளில் பணிபுரியும் 70 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்