பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20% வரை உயர்த்தியுளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
ஆகஸ்ட் 9ஆம் தேதி எச்டிஎஃப்சி நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.25% உயர்த்தியது. இதேபோல ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சில வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. கடன்களுக்கான வட்டி உயர்வால் அதிக EMI தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனினும், வட்டி உயர்வால் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களும் பயனடைவார்கள்.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
ஆகஸ்ட் 9ஆம் தேதி எச்டிஎஃப்சி நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.25% உயர்த்தியது. இதேபோல ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சில வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. கடன்களுக்கான வட்டி உயர்வால் அதிக EMI தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனினும், வட்டி உயர்வால் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களும் பயனடைவார்கள்.