ஆப்நகரம்

bank strike: இன்று வங்கிகள் இயங்காது... வாடிக்கையாளர்கள் அவதி!

ஏடிஎம்கள் இருக்கா, இல்லையா?

Samayam Tamil 15 Mar 2021, 3:43 pm
இரண்டு நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இன்றும் நாளையும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil banking services affected today as two days bank strike on march 15 and 16
bank strike: இன்று வங்கிகள் இயங்காது... வாடிக்கையாளர்கள் அவதி!


ஏன் இந்த ஸ்டிரைக்?

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது என்பது நீண்ட காலமாகவே நடந்துவருகிறது. போதிய வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியிலும் கடன் வலையிலும் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களின் குறிப்பிட்ட பங்குகள் அல்லது முழு நிறுவனத்தையும் தனியாருக்கு விற்பனை செய்து அதன் வாயிலாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. இதனால் அந்த நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களின் வேலையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இதை எதிர்த்து வங்கி யூனியன்கள் கூட்டமைப்பு (UFBU) போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது.

தொடர்ந்து நான்கு நாட்கள்...

வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அதாவது மார்ச் 15 மற்றும் 16. மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மார்ச் 14 ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் வங்கிகள் இயங்கவில்லை. இதன்படி மொத்தம் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வந்துள்ளது. இந்தப் போராட்டத்தில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர். வங்கிகளைத் தனியார் மயமாக்கும் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வங்கிச் சேவைகள் பாதிப்பு!

இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது, செக் கிளீயரன்ஸ், கடன் ஒப்புதல் போன்ற அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. நல்ல செய்தியாக ஏடிஎம்கள் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் இயங்கும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, ஏடிஎம்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்படுகின்றன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகிந்திரா பேங்க், இந்தஸ் இந்த் பேங்க் போன்ற வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து இயங்குகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்