ஆப்நகரம்

பென்சன் பணத்தை உடனடியாகக் கொடுக்க நடவடிக்கை!

பென்சன் பணத்தை வங்கிகள் விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Jun 2021, 4:16 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும், குறிப்பாக பென்சன் போன்ற உதவிகளைப் பெறுவதும் சிரமமாகியுள்ளது. இந்நிலையில் பென்சன் வாங்குவோருக்கு கொரோனா சமயத்தில் உதவும் வகையில் பென்சன் விதிமுறைகளில் முக்கியமான திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil pension


முதியவர்கள் பென்சன் பெறுவதில் உள்ள சிரமத்தைப் போக்கவும், பென்சன் பணம் விரைந்து கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, பென்சன் பணத்தை வங்கிகள் விரைந்து வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை மத்திய பென்சன் துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங் வெளியிய்யிட்டுள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கையும் பென்சன் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் 10 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்! ஜூன் 30 கடைசி நாள்!
குடும்ப பென்சன் பெறுவதில் உள்ள சிரமத்தையும் மத்திய அரசு குறைத்துள்ளது. குடும்ப பென்சன் வாங்குபவர்கள் அதற்கு விண்ணப்பித்தவுடன் அவர்களுக்கான பென்சன் தொகை விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப பென்சனுக்கு விண்ணப்பித்தவுடன் அதற்கான ஒப்புதல் பெறுவதில் உள்ள கால அவகாசத்தைக் குறைத்து, விரைந்து பென்சன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பென்சன்தாரரின் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது கட்டணம் மற்றும் கணக்காளர் அலுவலகத்துக்குச் சென்று ஒப்புதல் பெறுவதற்கான சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இதுபோன்ற பல்வேறு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்