ஆப்நகரம்

ஏடிஎம் கார்டில் பணம் இல்லாவிட்டால் அபராதமா?

வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் இருக்கும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Samayam Tamil 28 Dec 2020, 4:38 pm
சில நேரங்களில், நம்மில் பலர் பணத் தேவையின்போது ஏடிஎம் மையத்திற்குச் சென்று அவசர அவசரமாகப் பணம் எடுப்போம். நமது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமலேயே பணம் எடுப்பதும் உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்திலேயே பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு பணம் எடுப்பார்கள். அப்படி பேலன்ஸ் செக் பண்ணாமலேயே பணம் எடுத்தால் என்ன ஆகும்? ஒருவேளை உங்களது வங்கிக் கணக்கில் 400 ரூபாய் மட்டுமே இருந்து நீங்கள் 500 ரூபாய் எடுக்க முயற்சித்தால் பணம் வராது. insuffient balance என்று செய்தி வரும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
Samayam Tamil atm


உங்களது வங்கிக் கணக்கில் போதிய அளவில் பணம் இல்லாமல் இருந்து அதை ஏடிஎம் எந்திரத்தில் எடுக்க முயற்சித்தால் அதற்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் விதிமுறை நீண்ட காலமாகவே நடைமுறையில் இருந்துவருகிறது. ஆனால் அதுகுறித்து பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் விவரத்தைத் தெரிந்துகொண்டு அதன் பின்னர் பணம் எடுக்கலாம்.

42 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் பென்சன்! அருமையான திட்டம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகிந்திரா பேங்க், யெஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியைப் பொறுத்தவரையில், அதே வங்கியின் ஏடிஎம்களில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் வரியுடன் சேர்த்து ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோடாக் மகிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியிலும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்