ஆப்நகரம்

அவசரகாலக் கடன்: வாரி வழங்கிய வங்கிகள்!

அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 4:15 pm
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பமுள்ள முத்ரா கடனாளிகளுக்கு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரை கூடுதல் கடன் அளிக்கப்படும் என்று சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை கூடுதல் கடனுக்கு தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும் எனவும், இத்திட்டத்தின் கீழ் உத்தரவாதக் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. இக்கடன்களுக்கான வட்டி விகிதம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 9.25 சதவீதம் எனவும், வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு 14 சதவீதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
Samayam Tamil loan


இந்த அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையில் பயனாளிகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் இதுவரையில் ரூ.76,044.44 கோடி கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தொகையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையில் ரூ.56,483.41 கோடி வழங்கப்பட்டுவிட்டது.

வேலை தேடுவோருக்கு நற்செய்தி... புதிய மொபைல் ஆப் தொடக்கம்!

அதேபோல, அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் தனியார் துறை வங்கிகள் இணைந்து ரூ.74,715.02 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கி, அதில் ரூ.45,762.36 கோடியைப் பட்டுவாடா செய்துள்ளன. இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.6,007.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, லட்சத்தீவுகளுக்கு ரூ.1.59 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ரூ.7,740.06 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.5,693.71 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்