ஆப்நகரம்

பத்து நாட்களுக்கு பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக கடந்த பத்து நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNN 20 Nov 2016, 8:50 am
சென்னை: ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக கடந்த பத்து நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil banks holiday today
பத்து நாட்களுக்கு பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்பின்னர், மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மத்திய அரசு அறிவித்துள்ள மாற்று வழிகளின் படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் சிரமமின்றி வாங்கும் பொருட்டு, வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Banks holiday today

அடுத்த செய்தி

டிரெண்டிங்