ஆப்நகரம்

நான்காகக் குறையும் பத்து வங்கிகள்: எப்போது தெரியுமா?

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Mar 2020, 8:14 pm
இந்திய வங்கித் துறை நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினைகளாலும் போதிய மூலதனம் இல்லாமலும் தவித்து வருகிறது. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளின் நிலை மிக மோசமாக இருந்து வருகிறது. அதோடு, நிதி மோசடிகளும் அதிகரித்து வருவதால் வங்கிகள் தொடர்ந்து இயங்குவதே கடினமாக இருக்கிறது.
Samayam Tamil நான்காகக் குறையும் பத்து வங்கிகள்_ எப்போது தெரியுமா


இதுபோன்ற சூழலில், பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன்படி, பத்து பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது.

இந்திய ரயில்வே தனியாருக்குச் செல்கிறதா?

இதன்படி, யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க் கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பங்குகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை ஏப்ரல் 1லிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோ கரன்சிக்கு தடை நீக்கம்; அப்படி இதுல என்னதான் இருக்கு?

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுகின்றன.

தங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு அதிர்ச்சிச் செய்தி!!

இதனால், 7 பெரிய பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரும் இணைப்பால் உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்திய வங்கிகள் உயரும் எனவும், இந்திய அளவிலும் உலக அளவிலும் போட்டியிட முடியும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்